
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை முறையான பராமரிப்பில்லாமல் இருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு பரிசோதனைகள் செய்ய காலதாமதம் ஆவதாகவும், நோய் முற்றிய நிலையில் இருப்பதாக கூறி வரும்போதே அச்சுறுத்துவதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவாக 1969-ம் ஆண்டு அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் காஞ்சிபுரம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கூட புற்றுநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். தற்போது 750 படுக்கைகள் கொண்ட ஒப்புயர்வு மையமாக இந்த புற்றுநோய் மருத்துவ மையத்தை தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.