
காரைக்குடி: சிறப்பு சார்பு-ஆய்வாளர் கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுண்டர் செய்தது மாபெரும் தவறு என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அடிக்கடி தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். பத்தம் வகுப்பு, பிளஸ் 2-வுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்துவதே சரியானது. தேர்தல் ஆணையம் அரசுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. அது நடுநிலையாக செயல்படுகிறதா? என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ராகுல்காந்தி ஒரு தொகுதியில் எப்படி அதிக வாக்காளர்கள் சேர்த்துள்ளனர் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை புள்ளி விவரங்களுடன் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் உண்மையானது தானா என சந்தேகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.