
பல்லாவரம்: இந்திய நாடே தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்து, “இதுதான் வளர்ச்சி இதுதான் வழி” என்று சொல்லும் அளவிற்கு நிச்சயமாக செயல்படுவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் தகுதியான பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.