
விழுப்புரம்: மகன் அன்புமணி கூட்டிய பொதுக்குழு குறித்த கேள்விக்கு நான் சொல்வதற்கு ஏதும் இல்லை என விரக்தியுடன் கூறிவிட்டு பூம்புகார் மாநாட்டுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆக. 9) புறப்பட்டு சென்றார்.
பாமக தலைவரான மகன் அன்புமணிக்கு கடிவாளம் போட நினைக்கும் நிறுவனர் ராமதாஸின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மகன் அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ராமதாசின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (ஆக. 8) இரவு தள்ளுபடி செய்தது. மேலும் பொதுக்குழுவை நடத்தவும் அனுமதி வழங்கியது.