
மும்பை: முகநூலில் நட்பாக பழகிய பெண்ணிடம், மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் 2 ஆண்டுகளில் ரூ.8.7 கோடி பணத்தை இழந்துள்ளார். மும்பையில் வசிக்கும் 80 வயது முதியவருக்கு, கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகநூலில் சார்வி என்ற பெண் நட்பாக பழகுவதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஏற்றுக் கொண்டவுடன் இருவரும் போன் எண்களை பரிமாறி வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் தொடர்ந்து தகவல்களை பரிமாறியுள்ளனர். கணவரை விட்டுப் பிரிந்து பிள்ளைகளுடன் வசிப்பதாக சார்வி கூறியுள்ளார். அதன்பின் பிள்ளைகளுக்கு உடல்நிலை பாதிப்பு என கூறி முதியவரிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் அவ்வப்போது யுபிஐ மூலம் பணம் அனுப்பி உதவியுள்ளார்.