
ஊட்டி: மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பாஜக சார்பில் மூவர்ணக்கொடி ஊர்வலம் நடந்தது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜக மாவட்ட தலைவர் தர்மன், அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத், கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், முன்னாள் எம்பி கே.ஆர்.அர்ஜூணன் உட்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.