• August 9, 2025
  • NewsEditor
  • 0

விசாகப்பட்டினம்: ஆந்​திர மாநிலத்​தில் வெல்​டிங் கடை​யில் காஸ் சிலிண்​டர் வெடித்​த​தில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் உயிரிழந்​தனர். ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் துறை​முகம் அருகே உள்ள புக்கா வீதி​யில் கணேஷ் (45) என்​பவர் வெல்​டிங் கடை வைத்​திருந்​தார். இவர் மீன்​பிடி படகு​களுக்கு வெல்​டிங் செய்து கொடுத்து வந்​தார்.

இந்​நிலை​யில நேற்று முன்​தினம் இரவு கணேஷ் மற்​றும் 4 ஊழியர்​கள் கடை​யில் வெல்​டிங் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது திடீரென காஸ் சிலிண்​டர் வெடித்​த​தில் கணேஷ், ஊழியர் ஸ்ரீனு (32) ஆகிய இரு​வரும் அதே இடத்​தில் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும், முத்​தி​யாலு, எல்​லாஜி, சன்​னாசி ராவ், பக்​கத்து கடைக்​காரர் ரங்​கா​ராவ் ஆகியோர் படு​கா​யம் அடைந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *