
கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே அரசு பேருந்தில் இருந்து மாணவ, மாணவிகள் இறக்கி விடப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று காலை அரசுப் பேருந்தில் ஏற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலை 7.55 மணிக்கு மேலக்கரந்தைக்கு வரும் கோவில்பட்டியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் அரசுப் பேருந்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.