
புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்? என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கடிதம் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் அசோக் குமார் மிட்டல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கடிதத்தை அவர் எக்ஸ் தளத்தில் அண்மையில் பகிர்ந்திருந்தார். அதில் கூறியுள்ளதாவது: “ஆக.6-ம் தேதி உங்களின் அரசு நிர்வாகம் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 25% வரியை விதித்தது. ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து இந்தியா வாங்குவதைக் காரணம் காட்டி மொத்த வரியை 50% ஆக உயர்த்தி உள்ளீர்கள். நீண்ட கால கூட்டாண்மையைக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நடவடிக்கை மிகவும் ஏமாற்றமளிக்கிறது.