
புதுடெல்லி: அவசரகால பயன்பாட்டுக்கான 4 மருந்துகளுக்கு மத்திய அரசு விலை உச்சவரம்பு நிர்ணயம் செய்துள்ளது. இதுபோல் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பி உள்ளிட்ட 37 மருந்துகளுக்கு சில்லறை விலை நிர்ணயம் செய்துள்ளது.
மூச்சுத்திணறல், இருமல், நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மார்பு இறுக்கம் போன்றவற்றை தடுக்க பயன்படுத்தும் இப்ராட்ரோபியம் (Ipratropium) உள்ளிட்ட மருந்துகள் அவசரகால பயன்பாட்டு மருந்துகளாக உள்ளன. இவற்றுக்கான விலை உச்சவரம்பு ஒரு மில்லிக்கு ரூ.2.96 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.