
சாத்தூர்: விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்ட பழனிசாமி, பொதுமக்களிடையே பேசியதாவது: திமுக ஆட்சியில் அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு என அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.