• August 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அனைத்து அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களி​லும் பாலின உளவியல் விழிப்​புணர்​வுக் குழு ஏற்​படுத்​தப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​தார். சென்னை நந்​தனம் அரசு கலைக்கல்​லூரி​யில் “பாலின உளவியல் குறித்த கண்​காணிப்பு மற்​றும் விழிப்​புணர்​வுக் குழு'' நேற்று தொடங்​கப்​பட்​டது. இக்​குழுவை உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன், மக்​கள் நல்​வாழ்​வுத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் ஆகியோர் தொடங்​கி​வைத்​தனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் கோவி.செழியன் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே உயர்​கல்​வி​யில் தமிழகம் உயர்ந்த நிலை​யில் இருக்க வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் தமிழக முதல்​வர் பல்​வேறு திட்​டங்​களைச் செயல்​படுத்தி வரு​கிறார். ஆண்​டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்​கும் இலக்​குடன் தொடங்​கப்​பட்ட `நான் முதல்​வன்' திட்​டத்​தில் கடந்த 3 ஆண்​டு​களில் மட்​டும் 41 லட்​சம் பேருக்கு பயிற்சி வழங்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *