
சென்னை: “இருமொழி கொள்கை தான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும். கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழகத்தை மேலும் முன்னேற்றுவோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (ஆக. 8) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “பள்ளி மாணவர்கள், இளைஞர்களை பார்த்தாலே புதிய உற்சாகம் பிறந்து விடுகிறது. இந்த ஆண்டு பள்ளிக்கல்வி முடித்த 75% மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். ஐஐடியில் தமிழக மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து இந்த ஆண்டு 27% ஆக உயர்ந்துள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.