• August 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதாந்திர குறைதீர் கூட்டம், 15 இடங்களில் நாளை (ஆக.9) நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்துக்கான குறை தீர்க்கும் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீர் வாரியத்தின் 15 இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார் வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *