
சென்னை: மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு பெயரை மட்டும் மாற்றினால் சமூகநீதியை நிலைநாட்டிட முடியுமா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு, சீர்மரபினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் மாணவர் விடுதிகளை, ‘சமூக நீதி விடுதிகள்’ என்ற ஒரே குடையின் கீழ் இணைக்கும் திமுக அரசின் விளம்பர திட்டம் அபத்தமானது. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான காரணங்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி.