
சிவகாசி: டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பதால், அங்கு இருக்கும் காற்று மாசு அளவை வைத்து பட்டாசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உச்ச நீதிமன்றம் இருந்திருந்தால் தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்கலாம், என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” சுற்று பயணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சிவகாசி வட்டார பட்டாசு, தீப்பெட்டி, காலண்டர் உற்பத்தியாளர்கள், அச்சகம், பேப்பர் மெர்சென்ட் உரிமையாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.