
சென்னை: அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரை தனது அறையில் தனியாக சந்திப்பதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்புமணி தலைமையில் வரும் 9 தேதி நடைபெறும் பா.ம.க பொதுக் குழுவிற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அண்மைக் காலத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு அவரை செயல் தலைவராக நியமித்தத்தோடு மட்டுமல்லாமல் இனிமேல் நான் தான் பாமகவுக்கு தலைவராக இருப்பேன் என்றும் ராமதாஸ் அறிவித்தார்.