
சென்னை: சென்னையில் 31-ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்து முன்னணி 1980-ல் ராம கோபாலனால் தொடங்கப்பட்டது. 1983-ம் ஆண்டு சென்னையில் ஒரே ஒரு விநாயகர் சிலையை வைத்து ஓரிடத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி பொது விழாவை தொடங்கினோம். தற்போது தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து இந்து முன்னணி சார்பில் விழா எடுத்து கொண்டாடப்பட்டு வருகிறது.