• August 8, 2025
  • NewsEditor
  • 0

சூணாம்​போடு அடுத்த மணப்​பாக்​கம் கிராமத்​தில் தனி​யார் நிறு​வனம் சார்​பில் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்​பில் தூர்​வாரி சீரமைக்​கப்​பட்ட ஏரி​யின் மூலம் 150-க்​கும் மேற்​பட்ட விளைநிலங்​கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், மாவட்​டம் முழு​வதும் ஊரக வளர்ச்​சித்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள ஏரி​களை, தூர்​வாரி சீரமைக்க வேண்​டும் என உள்​ளூர் பொது​மக்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், செய்​யூர் வட்​டம், சூனாம்​பேடு அடுத்த மணப்​பாக்​கம் கிராமத்​தில் ஊராட்சி ஒன்​றிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி​யில் சேமிக்​கப்​படும் தண்​ணீர் மூலம் அப்​பகு​தி​யில் உள்ள விவ​சா​யிகள் சுமார் 150 ஏக்​கர் பரப்​பளவு​கொண்ட விளை நிலங்​களுக்கு பாசன வசதி பெற்று வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *