
சூணாம்போடு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பில் தூர்வாரி சீரமைக்கப்பட்ட ஏரியின் மூலம் 150-க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை, தூர்வாரி சீரமைக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சூனாம்பேடு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 150 ஏக்கர் பரப்பளவுகொண்ட விளை நிலங்களுக்கு பாசன வசதி பெற்று வருகின்றனர்.