• August 8, 2025
  • NewsEditor
  • 0

டேராடூன்: உத்​த​ராகண்ட் பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய 274 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். 9 ராணுவ வீரர்​கள் உட்பட 59 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. உத்​த​ராகண்​டில் கங்​கோத்ரி கோயிலுக்கு செல்​லும் வழி​யில் தரளி கிராமம் அமைந்​துள்​ளது. இமயமலை​யில் சுமார் 10,200 அடி உயரத்​தில் உள்ள இந்த கிராமத்​தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்​பால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது.

கீர் கங்கா நதி​யில் கரைபுரண்ட வெள்​ளத்​தால் தரளி கிராமம் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது. இதில் 5 பேர் உயி​ரிழந்​தனர். ஏராள​மானோர் காயமடைந்​தனர்.ராணுவம், விமானப் படை, தேசிய, மாநில பேரிடர் மீட்​புப் படைகள், மாநில காவல் துறை இணைந்து இரவு பகலாக தரளி கிராமத்​தில் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு உள்​ளன. வெள்ள பாதிப்​பு​களால் ஆங்​காங்கே சிக்​கித் தவித்த 274 சுற்​றுலா பயணி​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். 9 ராணுவ வீரர்​கள் உட்பட 59 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *