
புதுடெல்லி: துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது உள்ளிட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நீண்டகாலமாக கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.