
புதுடெல்லி: கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்ததைத் தொடர்ந்து ‘வாக்குகள் திருட்டு’ என்ற தலைப்பு எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
டெல்லியில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ராகுல் காந்தி இன்று நடத்தினார். அதில் அவர் கூறும்போது, “பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.