
திண்டிவனம்: “தண்ணீருக்குப் பதிலாக வியர்வையை ஊற்றி, பாமக எனும் ஆலமரத்தை உருவாக்கினேன். அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி கோடரி செய்து, அந்தக் கோடரியால் மரத்தையே வெட்ட முயற்சிக்கிறார் அன்புமணி” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் இன்று கூறியது: “தைலாபுரம் வரும் அன்புமணி, தாயை மட்டும் பார்த்துவிட்டு, என்னிடம் பேசாமல் செல்கிறார். மாற்று கட்சியில் இருந்து வந்த வழக்கறிஞர் ஒருவர் என்னை ‘ராமதாஸ்’ என்று அழைக்கிறார். ‘அய்யா’ என்று சொன்னவர்களை ‘ராமதாஸ்’ என்று சொல்ல வைத்தது அன்புமணிதான்.