• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: போலீஸ் எனக் கூறிக் கொண்டு வலம் வந்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க அனைத்து காவல் நிலைய போலீஸாரும் ரோந்துப் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். அதன்படி, வண்ணாரப்பேட்டை போலீஸார் அதே பகுதி கண்ணன் ரவுண்டானாவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து, அதிலிருந்த 2 இளைஞர்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வாகனத்துக்குள் ‘போலீஸ் அசிஸ்டன்ட்’ என குறிப்பிட்டு அடையாள அட்டை ஒன்று இருந்தது. அதை பறிமுதல் செய்து விசாரித்தபோது அது போலியான அடையாள அட்டை என தெரியவந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *