
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெ.பி. நட்டாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகாரம் அளித்துள்ளதாக கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பாஜக மூத்த தலைவரும் பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு, "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.