
புதுச்சேரி: திமுக ஆட்சியின் மீது விமர்சனம் வைக்க திருமாவளவன் தயக்கம் காட்டுவதாக தமிழிசை குற்றம்சாட்டினார்.
புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை, கடலூர் நிகழ்வுக்கு சென்று விட்டு புதுவைக்கு இன்று வந்தார். தனியார் விடுதிக்கு வந்த அவரை முதல்வர் ரங்கசாமி சந்தித்து சால்வை அணிவித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமிக்கு தமிழிசை வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமியிடம், “உங்களது ஆசி எனக்கு எப்போதும் வேண்டும். அரசியலிலும் உங்களது ஆசி எனக்கு தேவை” என்று தமிழிசை கூறினார். இதற்கு முதல்வர் ரங்கசாமி கையை உயர்த்தி ஆசி வழங்குவது போல் வாழ்த்துகளை தெரிவித்தார்.