
புதுடெல்லி: வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டு இந்தியா வர உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அஜித் தோவல், ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி பதிவாகி உள்ளது. அதில் அவர், "ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு மிகச் சிறப்பான உறவு இருக்கிறது. இது ஒரு நீண்ட கால உறவு. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட தொடர்புகள் உள்ளன. இந்தத் தொடர்புகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளன.