
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பி-கள் மேற்கொண்ட அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்குக் கூடின. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.