
உடுமலை: உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அது குறித்து மாவட்ட எஸ்.பி கிரிஸ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு: கைது செய்யப்பட்ட மணிகண்டனை சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டது. அப்போது கொலைக்கு பயன்படுத்திய அதே அரிவாளை எடுத்து போலீஸாரை தாக்க முயன்றபோது தான் துப்பாக்கியால் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரிவாளை கீழே போடச் சொல்லி பலமுறை அறிவுறுத்தியும் மணிகண்டன் கேட்கவில்லை. 2 முறை துப்பாக்கியால் சுட்டதில் ஒரு குண்டு மணிகண்டன் மீது பாய்ந்து உயிரிழப்பு ஏற்ப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.