
புதுடெல்லி: உத்தரப் பிரதேச அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு 3 நாள் இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஆகஸ்ட் 9-ல் வரவிருக்கும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பரிசாகக் கருதப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு இலவச பயணத்தைத் தொடங்கினார். எனினும், 2024-ம் ஆண்டு வரை ஒரு நாளைக்கு மட்டும் என இருந்த இந்த இலவசப் பயண வசதி, மூன்று நாட்களுக்கு என மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடப்பு வருடத்திற்கும் தொடர்கிறது.