
மதுரை: திருப்பூரில் விசாரணைக்கு சென்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதை இந்து மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”திருப்பூர் மடத்துக்குளம் பகுதியில் விசாரணைக்காக சென்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகவேல் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.