
புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் 121 உயிர்கள் பலியான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் 11 குற்றவாளிகளில் அக்கூட்டத்தை நடத்திய போலே பாபா பெயர் இடம்பெறவில்லை.
உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்ட சிக்கந்தராராவின் முகல்கடி கிராமம் உள்ளது. இங்கு சத்ஸங் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா, தன் ஆன்மிகக் கூட்டத்தை கூட்டியிருந்தார்.