• August 7, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதற்காக கடற்கரை சாலையில் உள்ள மேரி ஹாலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு முதல்வர் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன், திமுக உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத், திமுக அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *