
சென்னை: கோயில் பணியாளர்களுக்கு துறை நிலை ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் துறை நிலை ஓய்வூதியம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், துறை நிலை குடும்ப ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து, ரூ.2,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என 2025-26 சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.