
சென்னை: அயனாவரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி திமுக கவுன்சிலர் தனசேகரனின் பேரன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரம் சுரேஷ் என்பவரது மகன் நிதின்சாய் (19). மயிலாப்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 29 அன்று தனது கல்லூரி நண்பர்களுடன் அண்ணாநகரில் உணவருந்தச் சென்றார்.