• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாற்று இடங்​களில் தங்​களுக்கு வீடு​களை ஒதுக்கி தர கோரி, மெரினா காம​ராஜர் சாலை​யில் திருநங்​கைகள் திடீர் சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. தமிழக அரசு சார்​பில், சென்னை கண்​ணகி நகரில் திருநங்​கைகளுக்கு குடி​யிருப்​பு​கள் ஒதுக்​கப்​பட்​டது. அதில், நூற்​றுக்​கும் மேற்​பட்ட திருநங்​கைகள் வசித்து வரு​கின்​றனர்.

அங்கு அடிக்​கடி குற்​றங்​கள் நடப்​ப​தாக​வும், குடி​யிருக்க போதிய வசதி​கள் இல்லை எனவும் திருநங்​கைகள் குற்​றம் சாட்டி வந்​தனர். அதனால், மயி​லாப்​பூர் உள்பட சென்​னை​யில் வேறு இடங்​களில் தங்​களுக்கு வீடு​கள் ஒதுக்கி தர வேண்​டும் என கோரிக்கை விடுத்து வந்​தனர். மேலும், தங்​களது கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 50-க்​கும் மேற்​பட்ட திருநங்​கைகள் சென்னை மெரி​னா, காம​ராஜர் சாலை​யில் உள்ள நகர்​ப்புற வாழ்​விட மேம்​பாட்டு அலு​வல​கத்​தில் நேற்று மனு அளித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *