
சென்னை: இதர போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் கட்டணமின்றி மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம் என, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழறிஞர்கள், எல்லை காவலர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர்தியாகிகள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழக பேருந்துகளால் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.