
புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் சிங் எனும் பாபா ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள் பரோல் கிடைத்துள்ளது. இவர் கடந்த 8 வருடங்களில் 375 நாள் வெளியில் வந்து சென்றது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பிரபல துறவியாக இருப்பவர் குர்மீத் சிங் எனும் பாபா ராம் ரஹீம். இவர் தனது டேரா சச்சா சவுதா மடத்தின் ஹரியானா ஆசிரமத்தில் 2 இளம் பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவானது. இதில் ராம் ரஹீம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, கடந்த 2017-ல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு 2019-ல் பத்திரிகையாளர் ராமச்சந்திர சத்ரபதி கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.