
புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி, சீனாவுக்கு இம்மாதம் 31-ம் தேதி செல்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், ஈரான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சீனாவின் டியான்ஜின் நகரில் இம்மாதம் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டுக்கு சீனா தலைமை தாங்குகிறது.