
சென்னை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு இச்சம்பவம் உதாரணம். காவல் துறையினருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம்- ஒழுங்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.