
ஈரோடு: போர் விமான இயந்திரம் வடிவமைக்கும் தொழில்நுட்பம் உலகில் 4 நாடுகளில் மட்டும் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5-வது நாடாக அதில் இடம்பெறும் என்று ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு கூறினார்.
தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. இதில், கணித ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்புக்காக கோவை அமிர்தா பல்கலை. கணிதத் துறை உதவிப் பேராசிரியர் பொ.பிரகாஷுக்கு, ‘அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு விருது’ மற்றும் ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.