
தென்காசி: அதிமுக ஆட்சி அமைந்ததும் வீட்டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது.