
மதுரை: பொது இடங்களில் கொடிக் கம்பங்கள், கட்-அவுட்கள் அமைக்க தனி விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்கில், பிற கட்சிகள் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்தது.
இதையடுத்து, அதிமுக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், தவெக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.விஜயகுமார், சவுந்தர் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தன.