
சென்னை: கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது.
இக்கூட்டத் தொடரில், கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.