
சென்னை: தமிழர்களின் மண்,மொழி, மானம் காக்க ஓரணியில் இணைய வேண்டியதன் அவசியத்தை தெரிவிக்கும் விதமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வீடியோ ஒன்றை திமுக வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: இன்றைக்கு நாம் ஓரணியில் திரள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி என்ற பெயரில் தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை, இதுவரை மத்திய அரசிடம் இருந்து வழங்கப்படவில்லை. பேரிடர் நிவாரண நிதியும் தரவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், கல்வி நிதி, ரூ.2,150 கோடி இன்னும் வந்து சேரவில்லை.