
புதுடெல்லி: டெல்லி நடைபயிற்சி மேற்கொண்டபோது, தமிழக காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவரை டெல்லி போலீஸார் கைது செய்து 4 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சுதா, டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இவரும், திமுக மாநிலங்களவை எம்.பி. சல்மாவும் கடந்த 4-ம் தேதி காலை 6.15 மணிக்கு நடைபயிற்சிக்கு சென்றனர். சாணக்யபுரியில் உள்ள போலந்து தூதரகம் அருகே சென்றபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், எம்.பி.சுதாவின் கழுத்தில் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதில் சுதாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.