
சென்னை: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கு தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 2015-ம் ஆண்டு இறுதி முதல் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்து, அகவிலைப்படி உயர்வு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத் தலைவர் டி.கதிரேசன் கூறும்போது, “ஊதிய ஒப்பந்த பலனும் விரைவில் வழங்கப்படும் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால் அக்.7-ம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.