
திருச்சி: சாதிய கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி வரும் 9, 11-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் அதிகரித்துவரும் சாதி ரீதியிலான கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.