
திருப்பூர்: உடுமலை அருகே கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேலுவின் உடலுக்கு காவல் துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது உடல், உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அங்கு வந்த காவல் துறை தலைவர் சங்கர் ஜிவால், சண்முகவேலுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சண்முகவேலின் மனைவி மற்றும் மகனை சந்தித்து ஆறுதல் கூறினார்.