
சிவகாசி: பாஜக குறித்து யாரும் தவறாகப் பேசினால் உங்களுடன் சேர்ந்து முதல் ஆளாக நான் எதிர்த்து நிற்பேன் என நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
சிவகாசியில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கோபால்சாமி முன்னிலை வகித்தார்.